Search This Blog

Thursday, October 7, 2010

தனிமை

 எப்போதோ எல்லோரும் இருந்தும் யாரும் இல்லாத ஒரு தனிமையின் கணத்தை இதயம் அனுபவித்தபோது தோன்றியது,




உருவகப்படுத்த முடியாத கவிதையாய்
உறங்கிக்கிடக்கிறது  என் தனிமை
கடந்து செல்லும் யாரோ ஒருவரின் பின்னால்
 எதையோ தேடி ஓடும் நாய்குட்டியாய்

விரவிக்கிடகின்ற நட்சத்திரங்களுக்கு நடுவே
ஒற்றை நிலவாய்
என் தனிமை ...

பகிர்தலை தட்டி செல்லும் சக மனிதர்களை விடுத்தது
கர்பகிரக கடவுளாய்
மௌனியாய்
நானும் என் தனிமையும்
ஒரு பகிர்தலை  நோக்கி காத்திருக்கிறோம்...

                                                                                  ~யோகு 

 

1 comment:

Unknown said...

Good Start.. All the Best YOGU

Post a Comment