Search This Blog

Sunday, February 6, 2011

ஒரு வேண்டுகோள்.. ஒரு மொக்கை.. மற்றும் நிறைய கோபம்..

இப்போது நேரம் சரியாக திங்கட்கிழமை அதிகாலை .45 மணி. இவ்வளவு நேரம் என்ன பண்ணுறன்னு கேட்குறிங்களா ??
ம்ம்ம்.. அதை ஏன் கேக்குறிங்க. இப்ப நான் பெங்களூர் ல இல்ல , கேரளாவுல இருக்கேன்.
ஒரு ப்ராஜெக்ட் விசயமா இங்க வந்து 2 மாசத்துக்கு மேல ஆகுது. இப்ப ஹோட்டல் வாசம்.
நான் கொச்சின்ல info park பக்கத்துல இருக்க ஒரு ஹோட்டெல ரூம் போட்டு கொடுத்திருக்காங்க. ரூம் எதோ பரவாயில்ல ஆனா ரூம் வாடகத்தான் கொஞ்சம் அதிகம். எதோ கம்பெனி புண்ணியத்துல பொழப்பு ஓடுது.
இங்க வந்த நாளா, ஒன்னும் சொல்லுறதுக்கு இல்ல :-(.
ரொம்ப தனிமை வாட்டி எடுக்குது.
கொஞ்சம் நேரம்தான் எனக்கு கிடைக்குது ஆனா மனசு ரொம்ப வலுச்சு கிடக்கு.

ஓய்வுக்க ஏங்குது.
ஹ்ம்ம் என் சோக கதைய விடுங்க பாஸ். அது எப்பவுமே இருக்கும்.

இதனை நாள் இங்க ஓட்டுறதுக்கு ஒரு காரணம்?

"இது கடவுளின் சொந்த நகரம்.
தெருவெங்கும் வெறும் தேவதையின் ஆட்சி "

( நமக்கு இந்த பசங்க கூட பேசுறது friendship வச்சுக்கிறது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது ;-) )
எதோ அதனால கொஞ்சம் பொழப்பு ஓடுது ;-).
ஆனா பாசு , எந்த பொண்ண பாத்தாலும் எனக்கு ஒரே டயலாக்தான்  தோணுது .. "சொக்கா எனக்கில்ல அது எனக்கில்ல :-).". பின்ன ஊருல பொண்ணு பாத்துகிட்டு இருக்கற அம்மா வெளக்கமாத்தால அடிக்காதா?? :-)

இன்னும் 1 மாசம் இங்கதான் இருப்பேன்னு நினைக்கிறேன்.. பாப்போம்.
நான் ரொம்பவே பெங்களூரஅ மிஸ் பண்ணுறேன்.
ரொம்ப மொக்க போடுறேன்னு நினைக்கதீங்க பின்ன என்னங்க எழுத அப்பா உக்காந்தாலும் இவங்க பண்ணுற அட்டகாசம் ரத்தகொதிப்ப அதிகமாக்கிட்டே போகுதுங்க. என்ன பண்ண?? அதான் கொஞ்சம் ஜாலியா ஓர் நண்பன்கிட்ட பேசறமாதிரி ஆரம்பிச்சேன்.

என்னால இந்த காங்கிரஸ் திமுக இவங்க பண்ணுற கூத்த பாத்துக்கிட்டு சும்மா இருக்க முடியல.ஊருல ஒரு பழமொழி சொல்லுவாங்க.கேக்குறவன் கேனப்பயன்னா கேப்பயில்ல நெய் வடியும்மா ??

என்ன நெனச்கிட்டு இருக்காங்க இவங்க. 2G -ல ஊழல் நடக்கவே இல்ல . இவங்கள்ல யாரும் ராடிய கூட பேசவேயில்ல. சிபிஐ சும்மா போய் கேஸ் போட்டு புடுச்சுட்டு போக அவங்க என்ன நம்ம லோக்கல் போலீசா ?? அப்படி இருந்தா  போராட்டம் பண்ண வேண்டியதுதான??. நான் இவ்வளவு  நாளா நெனச்சுகிட்டு இருந்தேன் நம்ம கலைஞர்தான் திமுக அமைச்சர்கல நியமிக்கிறார் என்று . ஹ்ம்ம்.. இன்னும் எவ்வளவு நாளா எங்களைய முட்டளவே வச்சுருக்க போறீங்க??

இன்னும் எத்தன பேர பலி கொடுக்க போறீங்க தலைவர்களே. ஒரு வேலை சோத்துக்காக உயிரை பயணம் வெச்சு போய் மீன்பிடிக்கிறான். அவன் விரல்ல வைக்கிற மையுக்கு இறக்கிற மரியாத அவன் உயிருக்கு இல்லையா ?? தேர்தல் வந்தா மட்டுமே அவனப்பத்தி பேசுறீங்க.. அரிப்பு வந்தா டாக்டர்கிட்ட போற மாதிரி. அய்யா இப்ப கூட்டணி பத்தி பேசிட்டு வர போயிட்டு அங்க போய் எம் மீனவன பத்தி பேசுனேன்னு சொல்லி எங்கள ஏமாத்தாதிங்க.. உங்கள நம்பி அவன் கடலுக்கு போய் மறுபடியும் நஷ்டப்பட்டு வந்து நிக்கிறான்.
உங்களுக்கு ஆயிரம் பிரச்சினை இருக்கும். அதுல போய் இந்த சின்ன பிரச்சினை பற்றி யோசிக்க நேரம் இல்லன்னு சொல்லேடுங்க.. அவன் கடலுக்கு போகமாவது உயிரோட  இருப்பான்.
என் முகம் தெரியாத நண்பர் திரு நீச்சல்கரன் ஒரு பதிவை எழுதியிருக்கிறார். (நம்ம தல ஜாக்கி கூட  எழுதியிருகிறாரு)
நண்பர்களே , கொஞ்சம் நேரம் செலவிட்டு இந்த பதிவ படிச்சுட்டு உங்களோட கருத்தை பதிவு செய்யுங்கள்.

"இந்த துயரை இந்தியா அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இணைய படிவம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை படித்து நீங்களும் கையெழுத்துயிடலாம். http://www.petitiononline.com/TNfisher/petition.html கூடுதலான கோரிக்கைவைக்க விரும்பினாலும் அங்கே கருத்துரையில் தெரிவிக்கலாம். "
http://cybersimman.wordpress.com/2011/01/28/twitter-95

  "உலகில்
அநியாயம்  நடக்கும்
ஒவ்வொரு சமயமும்
அடக்க முடயாத
ஆத்திரத்தினால்
உங்களால்
குமுறிக் கொந்தளிக்க
முடிந்தால்   நாம்
தோழர்களே !!!!!"


நேரம் சரியாக 2  மணி அதிகாலை.. விடியலை நோக்கி காத்திருக்கிறோம்.

No comments:

Post a Comment